மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு 2017 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.