தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு : மாணவர்களுக்கு இலவசம் கிடையாது

“அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., – அரசு: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட, பவுஞ்சூரில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு,புதிய கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அரசின் பரிசீலனையில் இல்லை.

அரசு: பவுஞ்சூர் மற்றும் சித்தாமூரில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலக கட்டடம், மிகவும் பழுதடைந்துள்ளது; சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு அலுவலக கட்டடங்கள் காலி இருந்தால், அங்கு மாற்றப்படும். இடம்இல்லையெனில், புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., – ரகுபதி: தனியார் பள்ளிகளில்,ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்குவழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது.இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.

தி.மு.க., – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது,அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top