கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரனுக்கு அழைப்பில்லை. அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டனர். கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பள்ளி கல்வுத்துறை செயலாளர் உதய சந்திரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?

செங்கோட்டையனுடன் நடந்த மோதலால் இரு மாதமாக உதயசந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில முறைகேடுகளுக்கு உதயசந்திரன் ஒத்துப் போகாததால் நெருக்கடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை முதன்மை செயலாளரை நியமித்து உதயசந்திரன் அதிகாரித்தை குறைத்தனர். முதன்மை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு கல்வித்துறையில் உதயசந்திரன் ஓரம்கட்டப்பட்டார்.

மாற்றம் கொண்டுவந்த உதயசந்திரன்

கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல மாற்றங்களை உதயசந்திரன் செய்தார். பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வை உதயசந்திரன் அறிமுகப்பத்தினார். நீட்டுக்கு ஏற்ப பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்புகளை கொண்டுவர முயன்றார். ஆசிரியர் பணியிட மாறுதலில் வெளிப்படைத் தன்மையை உதயசந்திரன் கடைப்பிடித்தவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top