ஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்

ஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வங்கி கணக்குகள் உட்பட எல்லாவற்றுக்கும், ஆதார் எண்ணை பதிவு செய்வதை, மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு, மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக, மாவட்ட கருவூலங்கள், சார் நிலை கருவூலங்கள் ஓய்வூதிய பட்டியலை, ஒவ்வொரு மாதமும் 18 முதல் 22ம் தேதிக்குள் வங்கிகளுக்கு அனுப்புகின்றன. ஆனால் ஆதார்எண் இணைக்காதவர்களின் ஓய்வூதியத்தை வங்கிகள், கருவூலங்களுக்கு திருப்பி அனுப்பி விடுவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: வங்கிகள், சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு ஓய்வூதியத்தை திருப்பி அனுப்புவதை தவிர்க்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடாதவர்கள் விபரங்களை கருவூலங்களில் தெரிவிக்கலாம். வங்கி அறிவிப்பு பலகைகளிலும் ஒட்டலாம். சில ஓய்வூதியர்கள் ஆதார் எடுக்க முடியாத நிலையில் வயது முதிர்ச்சியால் படுத்தபடுக்கையாக உள்ளனர்.

கருவூல நேர்காணலுக்கு செல்ல முடியாமல், ஆன்லைனில் வாழ்வு மற்றும் மருத்துவ சான்றுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களது சிரமத்தை கருவூலங்களும் ஏற்று கொண்டுள்ளன. அதுபோல, வங்கி நிர்வாகங்கள் படுத்த படுக்கையாகவுள்ள முதியோர்களுக்கு மாற்று வழிகளை அறிவிக்க வேண்டும், என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top